பாஜக செயற்குழு கூட்டம்-திருநாவுக்கரசர் புறக்கணிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த பாஜக செயற் குழுக் கூட்டத்தை திருநாவுக்கரசரும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்த தரூணம் முதல் பாஜகவில் பயங்கர குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்காங்கே உட்கட்சி பூசல்களும் வெடித்துள்ளன. தேசிய அளவில் வெடித்த பூகம்பம் காரணமாக யஷ்வந்த் சிங் ராஜினாமா செய்தார்.
தமிழகத்தில் பாஜகவின் மாநில பொது செயலாளர் திருநாவுக்கரசரும் கட்சியில் இருந்து விரைவில் விலகும் நினைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் அவர் புறக்கணித்தார். இதை தொடர்ந்து நேற்று செங்கல்பட்டியில் நடந்த தமிழக பாஜக செயற்குழுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களும் இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு செல்லவிலல்லை.
திருநாவுக்கரசர் ஆதரவாளரான காசிமுத்து மாணிக்கத்தை சமீபத்தில் மாநில பாஜக தலைமை நீக்கியதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது.