Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முல்லை பெரியாறு அணையில் 'சேட்டன்கள்' சேட்டை!

Subscribe to Oneindia Tamil

Mullai Periyar
குமுளி: முல்லைப் பெரியாறு அணையில் கேரள பொதுப் பணித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அங்கு சட்டமன்றத் தேர்தல் வருவதால் இந்த பூச்சாண்டி வேலைகளில் அந்த மாநில அரசு ஈடுபட்டுள்ளதாக தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளி-தேக்கடி அணை எனப்புடம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகம் கோருவதை கேரளம் ஏற்க மறுக்கிறது.

அணை பலவீமான உள்ளதாகக் கூறி அதை இடித்துவிட்டு புதிய அணை கட்டப் போவதாகக் கூறி வருகிறது. இதன்மூலம் தமிழகத்துக்கு நீர் தருவதைத் தடுக்கும் வேலைகளில் 'சேட்டன்கள்' ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 19ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் மலையார்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வல்லக்கடவு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரிக்டர் அளவுகோளில் 3.3 புள்ளிகள் பதிவாகி இருப்பதாக கூறி, நேற்று கேரள பொதுப் பணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையை திடீர் ஆய்வு செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் அப்போது தமிழக அதிகாரிகள் யாருமே அணைப் பகுதியில் இல்லை. தமிழகத்திடம் தெரிவிக்காமலேயே 'சேட்டன்கள்' இந்த சேட்டையைச் செய்தனர்.

கட்டப்பனை செயற் பொறியாளர் ஜார்ஜ் டேனியல் என்பவர் தலைமையில் உதவிப் பொறியாளர் நிர்மல் உள்பட 7 பேரை கொண்ட குழுர் அணையை சுற்றிச் சுற்றி வந்து ஆய்வு செய்தது.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் பேசுகையில்,

முல்லை பெரியாறு அணை கட்டி 114 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் அணையின் பல பகுதியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அணையின் கைப்பிடி சுவரிலும் விரிசல் காணப்படுகிறது. இந்த ஆய்வின் அறிக்கையை கேரள அரசுக்கு விரைவில் சமர்ப்பிப்போம் என்றனர்.

தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற..

இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், கேரளத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அதில் கம்யூனிஸ்டுகளுக்கு வெற்றி நிச்சயமில்லை. இதனால் மக்களை திசை திருப்பி இந்தப் பிரச்சனையைக் கிளப்பிவிட்டு ஓட்டு வாங்க முயல்கிறார்கள்.

மேலும் கம்யூனி்ஸ்டுகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. கோஷ்டிப் பூசல் உச்சத்தில் உள்ளது. அதை மறைக்கவும் மக்களை கவனம் திரும்ப வைக்கவும் முல்லைப் பெரியாறு அணையில் சோதனை என்று வேலையைக் காட்டுகிறார்கள் என்றார்.

காவிரி டெல்டாவில் நீரேற்று எந்திரம் மூலம் பாசனம்:

இந் நிலையில் இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய துரைமுருகன்,

காவிரி டெல்டா பகுதிக்கு தஞ்சை மாவட்டத்தில் 5 இடங்களிலும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 12 இடங்களிலும் மொத்தம் 29 இடங்களில் நீரேற்று எந்திரம் மூலம் பாசன வசதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கொம்பு புதுவாத்தலை வாய்க்காலில் தண்ணீர் விடவும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+