மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு நீர்-எதியூரப்பா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்து, அணைகள் நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூர் அருகே ராமநகரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் நன்கு மழை பெய்து, அணைகளில் நீர் மட்டம் உயர்ந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இயலும் என்றார் எதியூரப்பா.
கர்நாடகம் வந்திருந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி குடகு மாவட்டத்தில் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். தனது சுற்றுலாவை முடித்துக் கொண்டு நேற்று அவர் டெல்லி திரும்பினார்.
வழியில் ராமநகரத்தில் அரசு விருந்தினர் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க வந்தபோதுதான் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார் எதியூரப்பா.












Click it and Unblock the Notifications