For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 1,300 பன்றிகள் கொன்று புதைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்வைன் ப்ளூ பரவலைத் தடுக்க சென்னையி்ல் 1,300 பன்றிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.

பன்றிக் காய்ச்சல் நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் டாக்டர்கள் குழுவினர் பயணிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டு இதுவரை 13 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சென்னை மாநகராட்சி சுகாதாரதுறையும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னையில் இதுவரை 1,300 பன்றிகளைக் கொன்று புதைத்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பன்றி வேட்டை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X