திருப்பூர்: இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்-ஜீப் சூறை
திருப்பூர்: திருப்பூர் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கி, ஜீப்பை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அவினாசி அருகே பேராநாயக்கன்புதூரை சேர்ந்தவர் ராமு. இவரை ஒரு வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேலு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
போகும் வழியில் இன்ஸ்பெக்டரின் ஜீப்பை, ராமுவின் உறவினர்கள் சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்கள் இன்ஸ்பெக்டரை சுற்றுவளைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். ராமுவும் அவர்களுடன் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அந்த கும்பல் இன்ஸ்பெக்டரின் ஜீப்பையும் அடித்து நொறுக்கியது. இதையடுத்து தகவல் அறிந்த மற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் தங்கவேலுவை தாக்கிய ராமு மற்றும் அவரது உறவினர்கள் மீது அவினாசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவினாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications