சென்னை சென்டரலில் 2 கொள்ளையர் கைது-200 பவுன் நகை பறிமுதல்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் நகைகளை கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 200 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் இந்று காலை சுமார் 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராகி கொண்டிருந்தது.
அப்போது அங்கு பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரது தங்கத்தாலியை பறித்தனர். இது சுமார் 2 பவுன் இருக்கும் என கூறப்படுகிறது.
இதேபோல் மற்றொரு பெண் பயணியை மிரட்டிய போது அவர் சத்தம் போட்டு மற்றவர்களை உதவிக்கு அழைத்தார். இதையடு்தது அந்த மர்ம நபர்கள் இருவரும் தப்பியோட முயன்றனர். ஆனால், அதற்குள் பெரும் கூட்டம் கூடிவிட்டது. பொதுமக்கள் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரயில்வே டிஐஜி சிவனாண்டி நேரில் சென்று அந்த இரண்டு கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள் இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களது பெயர் ஸ்ரீவஸ்தா ( 50), கம்னாத் ஜேக்கப் (49) என்றும் தெரிய வந்தது.
மேலும், அவர்கள் தாங்கள் 10க்கும் மேற்பட்ட ரயில்களில் பயணிகளிடம் ஏராளமான நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்ததையும் ஒத்துக் கொண்டனர். ஏசி பெட்டிகளில் பயணிகளை போல் ஏறி இரவு அனைவரும் தூங்கிவிடும் நேரத்தில் அவர்களது பெட்டியை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடுவது தங்கள் வழக்கம் என தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்த திருட்டு நகைகள் சுமார் 200 பவுனை பறிமுதல் செய்தனர். அந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications