சென்னை: சட்டவிரோத குடியேற்றம்-செக் வாலிபர் கைது
சென்னை: செக் குடியரசில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்தியர்களை சட்ட விரோதமாக குடியேற்றியதாக அந்நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை அசோக்நகரில் அகூரா நெட்வோர்க்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் முகமது ரபீக். இவர் செக் குடியரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சுமார் 29 வாலிபர்களிடம் பணம் வாங்கினார்.
அவர்களை செக் குடியரசை சேர்ந்த நோவாட்னி பிரான்டிசெக் என்ற 30 வயது வாலிபர் மூலம் அந்நாட்டு அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் யாருக்கும் முறைப்படி விசா எதுவும் வழங்கப்படவில்லை என புகார் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் முகமது ரபீக், நாதன், உமர் அசன், சுவாமிநாதன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
அதே நேரத்தில் நோவாட்னி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய சென்னை நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி முதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நோவாட்னி எப்படியும் இந்தியா வருவார் என்று நம்பிய சென்னை போலீசார் அவரை விமானத்தில் வைத்து கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பினர்.
இதையடுத்து கடந்த 24ம் தேதி மும்பை விமான நிலையத்தில் வைத்து நோவாட்னி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இரண்டு வாரம் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications