ஆஸி.யில் சீக்கிய மாணவர் தாக்கப்பட்டார்
Subscribe to Oneindia Tamil

ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட 20 வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சீக்கிய மாணவரின் டர்பனை கலைத்து விடவும், முடியை வெட்டவும் அந்தக் கும்பல் முயன்றுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த மாணவரின் பெயர் ரேஷம் சிங். பஞ்சாபைச் சேர்ந்த இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹாஸ்பிடாலிட்டி படிப்பை படிக்க மெல்போர்ன் வந்தார்.
நேற்று டேன்டனாங் என்ற ரயில் நிலையத்தில் வைத்து இவர் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து ரேஷம் சிங் கூறுகையில், முதலில் என்னைத் திட்டி விட்டு அந்த ஆறு பேரும் போய் விட்டனர். பின்னர் மீண்டும் திரும்பி வந்தனர். கையில் கத்திரிக்கோலுடன் வந்த அவர்கள் எனது டர்பனை கலைத்து விட்டனர். பின்னர் தலை முடியை வெட்டவும் முயற்சித்னர்.
அப்போது அருகில் இருந்த எனது நண்பர்கள் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்து என்னைக் காப்பாற்றினர் என்றார்.












Click it and Unblock the Notifications