ஏழைகளுக்கு தரமான மருந்து அளிக்கும் ராஜீ்வ் மருந்து திட்டம்: மு.க.அழகிரி அறிவிப்பு

தரமான, உயர்ந்த ரக மருந்துகளின் விலை இமயத்தைத் தொடும் வகையில் உள்ளது. வசதி படைத்தவர்களால் மட்டுமே இந்த மரு்நதுகளை வாங்க முடிகிறது.
இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க வேண்டியுள்ளது. அங்கும் கூட சில மருந்துகளை வெளியிலிருந்து வாங்கும்படி கூறுகின்றனர். ஆனால் அவற்றை வாங்கும் அளவுக்கு ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலை இல்லை.
இதைக் கருத்தில் கொண்டே ராஜீவ் காந்தி மருந்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மருந்துகள் வாங்கும் மாநில, அரசுகளின் மருத்துவத் துறைக்கு மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற மாநில அரசு மருத்துவமனைகளுக்கு ஜெனரிக் மருந்துகள் வாங்க வேண்டும். அம் மருந்துகளையே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.
இதனால் குறைந்த விலைக்கு தரமான மருந்துக்களை அதிக அளவில் வாங்கி விநியோகிக்க முடியும். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாகவே இந்த மருந்துகள் வழங்கப்படும்.
முதல் கட்டமாக இந்தத் திட்டம் தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அமைச்சர் அழகிரி சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று நிதியமைச்சகமும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பு பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் இடம் பெறவுள்ளது.
தமிழகத்தில் தற்போது 48.63 லட்சம் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். ராஜஸ்தானில் 15 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளன.
இத்தனை பேருக்கும் இலவசமாக மருந்துகள் தருவதாக இருந்தால் அது மத்திய அரசுக்கு மிகப் பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும். இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் அழகிரி ஆர்வமாக உள்ளார். அப்போது பொருளாதார சுமை மேலும் அதிகரிக்கும்.
இருப்பினும் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருந்துகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் மு.க.அழகிரி உறுதியாக உள்ளாராம்.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications