இந்தியாவில் 113 பேருக்கு 'ஸ்வைன்' ப்ளூ

ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
நேற்று வெளியான சோதனை முடிவில் அவர்களுக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து சென்னை சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், 38 வயதான ஆணுக்கும், அவருடன் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த 8, 6 மற்றும் 3 வயதான மூன்று குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
அமோரிக்காவிலிருந்து பெங்களூருக்கு வந்த 38 வயது பெண் மற்றும் 12 வயது சிறுமிக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதியாகியுள்ளது.
இது தவிர லண்டனில் இருந்து மும்பை வந்த 30 வயது வாலிபருக்கும், சிலியில் இருந்து மும்பை வந்த 28 வயது இளைஞருக்கும், சிட்னியில் இருந்து டெல்லி வந்த 55 வயது நபருக்கும் ஸ்வைன் ப்ளூ பாதிப்பு உள்ளது.
இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications