ராமேஸ்வரத்தில் கோலாகல கும்பாபிஷேகம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாதசுவாமி கோவிலின் ராஜ கோபுரத்திற்கும், அங்குள்ள பழமையான நந்திக்கும் இன்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதைக் கண்டு பரவசத்துடன் தரிசித்தனர்.
ராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் கடந்த 1904ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோபுரத்திற்கும், அம்மன் சன்னிதியில் உள்ள நுழைவாயில் மங்கள கோபுரத்திற்கும் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.
ராஜகோபுரத்தில் ரூ. 40 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்ன.
கடந்த 28ம் தேதி நவக்கிரக பூஜையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று மாலையுடன் இது முடிவடைந்து பூர்ணாஹுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு புனித நீர் அடங்கிய குடங்களைக் கொண்டு சிவாச்சாரியார்கள் ராஜ கோபுரத்திற்கு அபிஷேகம் செய்தனர். 10.15 மணியளவில் சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகள் காட்டப்பட்ன.
இதேபோல 386 ஆண்டுகள் ஆகி விட்ட பழமையான நந்தி சிலைக்கும் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் காண கூடியிருந்தனர். இதற்காக சிறப்பு பஸ்வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications