முல்லை பெரியாறு-பிரதமரை சந்திக்க டெல்லி போகிறார் அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: முல்லைபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் விரைவில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசவிருக்கிறார்.
தமிழக கேரள, எல்லையில் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் தற்போதைய உயரம் 136 அடி. இதை மேலும் 6 அடி உயர்த்தினால் தமிழகத்துக்கு கூடுதல் நீர் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு அதற்கான திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறது.
ஆனால், 112 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான இந்த அணை ஏற்கனவே பலவீனமாக இருக்கிறது. இதை மேலும் சில அடிகள் உயர்த்தினால் அணை உடைத்து பெரும் சேதம் ஏற்படும் என கேரளா எதிர் மாறான செய்திகளை பரப்பி வருகிறது.
இந்நிலையில் கேரள நீர்வளத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முல்லைபெரியாறு அணை விஷயமாக பிரதமரை சந்திக்க முதல்வர் அச்சுதானந்தன் டெல்லி செல்ல இருக்கிறார். அவர் விரைவில் டெல்லி செல்வார் என தெரிகிறது. ஆனால், எந்த தேதியில் கிளம்புகிறார், அவர் எப்போது பிரதமரை பார்ப்பார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
சமீபத்தில் முதல்வர் அச்சுதானந்தன், நீர்வளத்துறை அமைச்சர் பிரேம்சந்திரன் மற்றும் சில நிபுணர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications