நீதிபதியை மிரட்டிய ராஜாவை டிஸ்மிஸ் செய்க: ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மிரட்டி சாதகமாக தீர்ப்பளிக்குமாறு மிரட்டியவர் வேறு யாருமல்ல ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ஏ.ராசாதான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ..
மாண்புமிகு நீதிபதி ரகுபதி அவர்கள் தன்னை மிரட்டிப் பணிய வைக்க முயன்றது யார் என்பதை தெரிவிக்காவிட்டாலும் கூட, ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ஏ.ராசாதான் நீதிபதியை மிரட்டியவர் என்பதை அறிந்து கொள்ள மனித அறிவுக்கு மேற்பட்ட விசேஷ ஞானம் எதுவும் தேவையி்ல்லை.
மத்திய அமைச்சர் ஒருவர், பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை மிரட்டியிருப்பது இதுதான் முதல் முறையாகும். இதுபோன்ற அமைச்சர் மத்திய அமைச்சரவையில் இருக்கவே தகுதியற்றவர். உடனடியாக அவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications