வரதட்சணை-பெண் எஸ்ஐக்கு போலீஸ் வலை!
தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சண்முக வடிவு மீது போலீசார் வழக்குபதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயமணி என்பவருக்கும் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கூடுதலாக ஒரு லட்சம் வரதட்சணை கேட்டு மணிகண்டன் மற்றும் மார்த்தாண்டத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தும் வரும் அவரது தங்கை சண்முக வடிவு ஆகியோர் ஜெயமணியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து திருநெல்வேலி எஸ்.பி. கண்ணப்பனிடம், ஜெயமணி புகார் அளித்தார்.
அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறை உதவி ஆய்வாளர் வனிதா ராணி வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு மற்றம் குடும்பத்தாரை வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications