ஆஸி: இதுவரை 81 இந்தியர்கள் மீது தாக்குதல்-ரவி
டெல்லி: இந்த ஆண்டு மே 23ம் தேதி முதல் இன்று வரை இதுவரை 81 இந்தியர்கள் மீது ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடந்துள்ளதாக மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்தியர்கள் மீதான தாக்குதலை நடத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய அரசு உறுதியளித்துள்ளது.
மே 23ம் தேதி முதல் இதுவரை ஆஸ்திரேலியாவில் 81 இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசிடம், உயர்மட்ட அளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனடியாக இதுபோன்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என உறுதிபட சொல்லப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களின் பாதுகாப்பை ஆஸ்திரேலிய போலீஸார் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
சில வழக்குகளில் கைதுகள் நடந்துள்ளன. சில பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ரவி.












Click it and Unblock the Notifications