தனது முதல் மாத சம்பளத்தை ஏழைகளுக்கு அளித்த அழகிரி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மத்திய அமைச்சர் பதவிக்கான தனது முதல் மாத சம்பளமான 76 ஆயிரத்து 404 ரூபாயை மதுரை லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஏழை மக்களின் நலனுக்காக வழங்கியுள்ளார் மத்திய உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.

தன்னை முதல் முறையாக லோக்சபாவுக்கு அனுப்பி வைத்த மதுரை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு அழகிரி வழங்கியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மதிவாணன் கூறுகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் நிதிக்கு தனது முதல் மாத சம்பளத்தை வழங்கியுள்ளார் அமைச்சர் மு.க.அழகிரி.

இந்தப் பணத்தை ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார். எனவே இந்தப் பணம் முழுவதும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக செலவிடப்படும் என்றார் அவர்.

நிழல் அரசியல்வாதியாகவே இருந்து வந்த மு.க.அழகிரி கடந்த லோக்சபா தேர்தலில் முதல் முறையாக மதுரையிலிருந்து போட்டியிட்டு தேர்தல் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். இதில் அவர் 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

எம்.பியானதோடு மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள அழகிரி மக்களைக் கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார். தன்னை உயர்த்திய மதுரை தொகுதியை உயர்த்தும் வகையிலும் அவர் செயல்பட்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+