கன்னட அமைப்பு எதிர்ப்பு எதிரொலி - ரயில்வே தேர்வு ஒத்திவைப்பு
மைசூர்: மைசூரில் நடைபெறுவதாக இருந்த ரயில்வே வாரிய தேர்வில் வட இந்தியர்கள் பெருமளவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்ன ரக்சன வேதிகே அமைப்பு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தேர்வு ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
மைசூரில் ரயில்வே தேர்வு வாரியத்தின் தேர்வு இன்று நடப்பதாக இருந்தது. இதில் பல வட இந்தியர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தேர்வு மையத்திற்கு திரண்டு வந்த கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள், தேர்வு நடத்தக் கூடாது என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.
வினாத்தாள்களை கிழித்து எறிந்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த அமளி காரணமாக தேர்வு ஜூலை 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
இதேபோல பெங்களூலில் கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்த 20 பேர் போராட்டம் நடத்தி கைதானார்கள்.












Click it and Unblock the Notifications