பாதுகாப்புத்துறைக்கு ரூ. 1,41,703 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: நாட்டின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 34 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ. 1,05,600 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இது 2009-10ம் ஆண்டில் ரூ. 1,41,703 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகமாகும்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் அனைவருக்கும் ஒரே தரம், ஒரே பென்ஷன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் 12 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூடுதல் பென்ஷன் கிடைக்கும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2,100 கோடி கூடுதல் செலவாகும்.
அதே நேரத்தில் அதிகாரிகளுக்கான பென்ஷனி்ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ராணுவத்தினருக்கு நிகராக துணை ராணுவப் படையினருக்கு படிகள் வழங்கப்படும்.
துணை ராணுவத்தினருக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் 10,000 வீடுகள் கட்டப்படும்.