For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யலாம்.

சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரை மிதமான சூழ்நிலையே நிலவியது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X