பெரியாறு அணை பலமிழந்துவிட்டது: கேரளா சொல்லியாச்சு...

Subscribe to Oneindia Tamil

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணை பலமிழந்து விட்டது என்று கேரள எம்.பிக்கள் குழுத் தலைவர் தாமஸ் கூறியுள்ளார்.

கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில், கேரள நீர்ப் பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் முன்னிலையில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு கூட்டம் நடந்தது.

அதில், இடுக்கி தொகுதி காங்கிரஸ் எம்.பி. தாமஸ் தலைமையில், பெரியாறு அணை பிரச்சனையில் கேரள எம்பிக்கள் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.

இந் நிலையில், தாமஸ் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையி்ல்,

பெரியாறு அணை வலுவிழந்துவிட்டது. பல இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு அபாயகரமான நிலை காணப்படுகிறது.

முதல் கட்டமாக கேரள எம்பிக்கள் குழு தமிழக எம்பிக்களைச் சந்தித்து பெரியாறு அணை நிலைமையை விளக்குவது, அணைக்கு தமிழக எம்பிக்களை அழைத்துச் சென்று நேரில் விளக்கவது என்றும் முடிவு செய்துள்ளோம்.

மேலும் தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சு நடத்தவும், பிரதமர் தலைமையில் இரு மாநில முதல்வர்களும் பெரியாறு அணை பற்றி பேசவும் ஏற்பாடு செய்ய உள்ளோம்.

தற்போது பெரியாறு அணை பலவீனமாக உள்ளதால் புதிய அணை கட்டி தமிழகத்துக்குத் தொடர்ந்து இதுவரை கிடைத்துவந்த நீரை வழங்குவது, பெரியாறு அணை தொடர்பாக இரு மாநில அரசுகளும் ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நீடிக்கச் செய்வது என்றும் இதனால் தமிழகத்துக்குரிய உரிமைகள் தொடர்ந்து கிடைப்பதுடன், கேரள மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்பதையும் தமிழகத்துக்கு விளக்குவது என முடிவு செய்துள்ளோம் என்றார்.

ரொம்ப நல்லவரு...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+