900 ஆண்டு பழமை வாய்ந்த இந்துக் கோவிலில் முஸ்லீம் பூசாரிகள்

Subscribe to Oneindia Tamil

Temple
பகல்காம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் லிட்டர் ஆற்றுக் கரையோரம் உள்ள 900 ஆண்டு பழமை வாய்ந்த இந்து சிவன் கோவிலில் பூசாரியாக இரு முஸ்லீம்கள் செயல்பட்டு வருகின்றனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஒரே இந்துக் கோவில் இதுதான். லிட்டர் ஆற்றுக் கரையோரம் இந்தக் கோவில் உள்ளது. இக்கோவிலின் வயது 900 என்று கூறப்படுகிறது.

இந்தக் கோவிலில் தற்போது முகம்மது அப்துல்லா, குலாம் ஹசன் ஆகிய இரு முஸ்லீம்கள்தான் பூசாரிகளாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். காரணம், இப்பகுதியை விட்டு காஷ்மீரி இந்து பண்டிட்டுகள் இடம் பெயர்ந்து சென்று விட்டதால் முஸ்லீ்ம்களே பூசாரிகளாக உள்ளனர்.

இருவரும் கோவில் கதவுகளைத் திறந்து வைத்து கோவில் மணியை அடித்து பூசை செய்கின்றனர்.

இதுகுறித்து குலாம் ஹசன் கூறுகையில், கோவிலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தினசரி ஆரத்தி எடுத்து பூஜையும் செய்கிறோம்.

அதேபோல கோவிலுக்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் பிரசாதமும் தவறாமல் தருகிறோம். இங்குள்ள 3 அடி உயரமுடைய கருப்பு சிவலிங்கத்தையும் நாங்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

முன்பு அமர்நாத் யாத்திரை செல்வோர் தவறாமல் இந்தக் கோவிலுக்கும் வந்து செல்வார்களாம். இப்போது அவர்கள் யாரும் வருவதில்லையாம். எப்போதாவதுதான் பக்தர்கள் வருவார்களாம்.

ராஜா ஜெயசூரியா என்பவர் இந்தக் கோவிலை கட்டியுள்ளார்.

இந்துக்கள் இப்பகுதியை விட்டுப் போய் விட்டாலும் கூட அவர்களின் கோவிலை இரு முஸ்லீம் பூசாரிகள் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பூசையும் செய்வது மத நல்லிணக்கம் இன்னும் மட்கிப் போய் விடவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+