மதுரை அருகே பட்டாசு ஆலையில் பயங்கரம் - 17 பேர் பலி
மதுரை: மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உடல் கருகி 17 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே உள்ளது வடக்கம்பட்டி. இங்கு துரைப்பாண்டியன் என்பவர் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அரசு அனுமதி பெற்று முறைப்படி இந்த பட்டாசு தொழிற்சாலை நடந்து வருகிறது.
இங்கு 60-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வந்தனர். ஆலைக்குள் பட்டாசு தயாரிக்கும் பணி பல்வேறு அறைகளில் நடந்து வந்தது. நேற்று மாலையிலும் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு அறையில் பட்டாசுகள் திடீரென வெடித்து தீ பரவியது. அங்கு வெடித்த பட்டாசுகள் பக்கத்து அறைகளுக்குள்ளும் போய் விழுந்ததால் அங்கிருந்த பட்டாசுகளும் வெடிக்க தொடங்கின.
ராக்கெட் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கும் தீ வேகமாக பரவியது. அவை தாறுமாறாக பல்வேறு பகுதிகளுக்கும் பாய்ந்து சென்ற வண்ணம் இருந்தன.
இந்த பயங்கர விபத்தில் பட்டாசு ஆலையின் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. உள்ளே வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
பட்டாசுத் தொழிற்சாலையிலிருந்து வெளியே பாய்ந்து வந்த ராக்கெட்கள் அருகில் இருந்த வீடுகளுக்குள்ளும் விழுந்தது. இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் வெளியே ஓடினர்.
தீயணைப்பபுப் படையினர் விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிக் கிடந்தனர். அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கருகிக் காணப்பட்டன.
20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கிடந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்தவர்களில் 6 பேர் பெண்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் துரைப்பாண்டியன் போலீஸில் சரணடைந்துள்ளார்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications