அல்லாவின் பெயரால் கருணை காட்டுங்கள்: சரப்ஜித்
இஸ்லாமாபாத்: அல்லாவின் பெயரால் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். நான் எனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வகை செய்யும் விதத்தி்ல் எனக்குக் கருணை காட்டி மன்னித்து விடுவியுங்கள் என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சரப்ஜித் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் பரிதவித்து வரும் சரப்ஜித் சிங் சார்பில் அதிபர் சர்தாரியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. அத்துடன் சரப்ஜித் சிங் எழுதியுள்ள கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் தனக்கு கருணை காட்ட வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார் சரப்ஜித் சிங்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ளதாவது...
மரண தண்டனைக் கைதியான சரப்ஜித் சிங் எனப்படும் நான், கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் தவித்து வருகிறேன்.
அல்லாவின் பெயரால் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், என்னை மன்னித்து விடுங்கள். மிச்சமுள்ள எனது வாழ்நாளை, எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கழிக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதியுங்கள் என்று கோரியுள்ளார் சிங்.
உருது மொழியில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கின் புதிய வக்கீலான ஓவைஸ் ஷேக் கூறுகையில், நாளை அதிபர் சர்தாரியிடம் சரப்ஜித் சிங்கின் கருணை மனுவும், அவர் எழுதியுள்ள கடிதமும் வழங்கப்படவுள்ளது என்றார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications