இன்போசிஸ்-விடைபெறும் நிலேகனி

இதற்கான விழா பெங்களூரில் உள்ள இன்போஸிஸ் நிறுவன வளாகத்தில் இன்று மாலை எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடக்கிறது.
28 ஆண்டுகளுக்கு முன் நாராயணமூர்த்தியுடன் இணைந்து இன்போஸிஸ் நிறுவனத்தை உருவாக்கிய 7 பேர்களில் ஒருவர் நிலேகனி.
இன்போஸிஸ் நிறுவனத்தில் தனது நீண்ட சேவைக்குப் பிறகு, இப்போது மத்திய அரசின் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை ஏற்கிறார்.
இதைத் தொடர்ந்து இன்போஸிஸ் நிறுவனத்தின் அனைத்துப் பணிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார் நிலேகனி.
இதைத் தொடர்ந்து அவருக்கு இதயப் பூர்வமான வழியனுப்பு விழாவுக்கு இன்போஸிஸ் ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள இன்போஸிஸ் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேரில் பங்கேற்க முடியாத ஊழியர்களின் வசதிக்காக இந்த நிகழ்ச்சியை இன்போஸிஸ் இணையத் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications