எரிந்து விழுந்த காற்றாலை-ரூ. 9 கோடி இழப்பு

Subscribe to Oneindia Tamil

Windmill
திசையன்விளை: நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் காற்றாலை ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ. 9 கோடி என தெரிகிறது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உறுமன்குளத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை ஒன்று உள்ளது.

சுமார் 90 மீட்டர் உயரம் கொண்ட இந்த காற்றாலைகளில் இருந்து ஒரு மணி நேரத்தில் 1,500 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியம்.

இந்நிலையில் நேற்று இப்பகுதியில் இருந்த காற்றாலை ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது. இதையடுத்து திசையன்விளை மற்றும் வள்ளியூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் கமலேசன் தலைமையில் சாமி, சுந்தர், சரவண ஐயப்பன் என மூன்று வீரர்களும், வள்ளியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பையா தலைமையில் வீரர்கள் நம்பிராஜன், மாடசாமி உள்பட இரண்டு வீரர்கள் என மொத்தம் 7 பேர் இரண்டு தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தனர்.

அவர்கள் கடுமையாக போராடி சுமார் 4 மணி நேரத்துக்கு பின்னர் தீயை அணைத்தனர்.

இதில் காற்றாலையின் தலைபகுதி, இறக்கை மற்றும் தூணின் கீழ்பகுதி ஆகியவை எரிந்து நாசமாயின. மின்சார டிரான்ச்பார்ம் மற்றும் இயந்திரங்கள் முழுமையாக சேதமடைந்தன. இந்த காற்றாலையின் மதிப்பு ரூ. 9 கோடி என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+