தமிழகத்துக்கு மம்தா போட்ட பட்டை நாமம்..!

Subscribe to Oneindia Tamil

Mamatha Bannerjee
டெல்லி: ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடு மாற்றியமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அவர்,

உள்ளுர் மக்களுக்கு அதிக வேலைகள் கிடைக்கும் வகையில் ரயில்வேயில் ஊழியர்கள் சேர்க்கையில் மாற்றம் கொண்டு வரப்படும். பிராந்திய மொழிகளிலும் ரயில்வே பணியாளர் சேர்க்கைத் தேர்வுகள் நடத்தப்படும்.

மக்களுக்கு பயனுடையதாகவும் பாதுகாப்பானதுமாக ரயில்வே மாற்றப்படும். திருச்சி ரயில் நிலையம் உலகத் தரம் உடையதாக உயர்த்தப்படும் என்றார்.

தமிழகத்துக்கு பட்டை நாமம்..

ஆனால், ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பட்டை நாமம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டை விட குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. 2008-09ம் ஆண்டு தமிழக ரயில்வே வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ. 918 கோடி செலவிடப்பட்டது.

ஆனால் ரூ. 589 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதி்ல்
அகலப் பாதை பணிகளுக்கு ரூ. 175 கோடி, புதிய பாதைகள் அமைக்க ரூ. 120 கோடி, 2வது அகலப்பாதைகள் அமைக்க ரூ. 97.5 கோடி, மேம்பாலம், சுரங்கப்பாதை உள்ளிட்ட சாலை பாதுகாப்பு பணிகளுக்கு ரூ. 71.34 கோடி, சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு அகலப் பாதை பணிக்கு ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே ரூ. 1,500 கோடி நிதி கேட்ட நிலையில் அதி்ல் பாதியைக் கூட பட்ஜெட்டில் மம்தா ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+