சென்னை: 5 வயது சிறுமியை நாசம் செய்த கும்பல்!
சென்னை: சென்னை அருகே 5 வயதே ஆன சிறுமியை ஒரு கொடூர கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் மோகன் ராவ். இவர் சென்னை அருகே ராஜீவ் காந்தி சாலையில் (ஐ.டி. காரிடார்) உள்ள ஏகத்தூர் என்ற இடத்தில், கட்ட வேலை பார்த்து வருகிறார்.
அதிகாலையில் இவரது 5 வயது மகளை ஒரு கும்பல் அருகில் உள்ள பகுதிக்குத் தூக்கிச் சென்று கற்பழித்து விட்டு தப்பியுள்ளது.
அதிர்ச்சி அடைந்த மோகன் ராவ், தனது மகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் இது போலீஸ் கேஸ் என்று கூறி அந்த மருத்துவமனை சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது.
இதையடுத்து எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளார் மோகன் ராவ்.
இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் கூறுகையில், ஏகத்தூர் பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கிட்டத்தட்ட 3000 பேர் வரை இருப்பார்கள் எனத் தெரிகிறது.
அவர்களில் யாராவது சிலர்தான் இதைச் செய்திருக்க வேண்டும். இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.