ஜீப்பிலிருந்து குதித்து ஓடிய ரவுடி சுட்டுக் கொலை
திருத்தணி: கோர்ட்டுக்குக் கொண்டு செல்லும் வழியில் ஜீப்பிலிருந்து குதித்து தப்பி ஓடிய ரவுடியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் தனசேகர். 24 வயதாகும் இவர் அப்பகுதியில் ரவுடியாம். கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தம் உடையவர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனசேகரை ஒரு வழக்கில் திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் ஜீப்பில் அழைத்து வந்தனர்.
ஆற்காடு குப்பம் என்ற இடத்தில் ஜீப் வந்தபோது திடீரென தனசேகர் ஜீப்பிலிருந்து குதித்துத் தப்பி ஓடினாராம். இதையடுத்து போலீஸார் கீழே இறங்கி அவரை துரத்தியுள்ளனர்.
சரணடையுமாறு கூறியும் அவர் சரணடையாமல் தப்பிச் செல்ல முயன்றதால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் குண்டு பாய்ந்து ரவுடி தனசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இன்று பிற்பகலில் நடந்த இந்த என்கவுண்டரால் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications