பெண் கவுன்சிலர், சிறுமியை கடித்து குதறிய நாய்கள்

Subscribe to Oneindia Tamil

வந்தவாசி: வந்தவாசியில் சிறுமி, ஒரு பெண் கவுன்சிலர் ஆகியோரை தெரு நாய்கள் கடித்துக் குதறியதால் தெரு நாய்களைப் பிடித்து அழிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வந்தவாசி முழுக்க நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது , ஆண்டுக்கு ஒருமுறை தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து, அதனை ஊருக்கு வெளியே கொண்டு சென்று விஷ ஊசி போட்டு புதைப்பது வழக்கம். ஆனால் தற்போது விலங்கு வதை சட்டத்தின் கீழ் நாய்களை கொல்ல கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் பல்வேறு நகராட்சிகள் நாய்களை சாகடிக்காமல், இனபெருக்க தடை அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். ஆனால் வந்தவாசி நகராட்சி இதில் ஏதும் கவனம் செலுத்தாமல் உள்ளதாக பொது மக்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.

வந்தவாசி நகராட்சி பயணியர் விடுதி பின்புறம் வசிப்பவர் ஜாபர், கார் டிரைவர். இவரது மகள் அகிலா (3).

இந்ச சிறுமி ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியை நாய் கடித்த குதறியது. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, சிறுமி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் 1 -வது வார்டு பெண் திமுக கவுன்சிலர் அன்பழகி என்பவரையும் தெரு நாய் கடித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அவர் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொதுமக்களை அடிக்கடி கடித்து தொல்லை கொடுக்கும் நாயக்ளை உடனே பிடித்து நகர பகுதியில் இருந்து அப்புற படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+