'மலத்தை கையால் அள்ளுவது நாட்டுக்கே அவமானம்'
ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் துப்புரவுத் தொழிலாளர்கள் மனித மலத்தை கைகளால் அள்ளும் அவல நிலை நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மக்களவையில் கூறினார்.
நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசுகையில்,
ரயில்வே பட்ஜெட்டில் 'கிளாஸ் 4' தொழிலாளர்கள் நலன் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. இந்த 21ம் நூற்றாண்டிலும் ரயில்வே துறையின் துப்புரவுத் தொழிலாளர்கள் மனித மலத்தை கைகளால் அள்ளும் நிலை உள்ளது. இது நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம்.
எனவே மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசு தானியங்கி கருவிகளை வாங்க வேண்டும். அவ்வாறு தானியங்கிக் கருவிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட பின் அந்தத் தொழிலாளிகளுக்கு வேறு வகையான பணிகளை கொடுக்கலாம்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு 8 மணி நேரம்தான் வேலை. ஆனால் ரயில்வே கிளாஸ் 4 தொழிலாளர்களுக்கு மட்டும் 12 மணி நேர வேலை. இது மிகப்பெரிய அநீதியாகும். எனவே அரசு அவர்களது வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.
அகல ரயில் பாதை மாற்றும் திட்டத்திலுள்ள சில குறைகளை இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். 2009-10ம் ஆண்டுக்கென ஒரு இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1300 கிமீ அளவிலான வழித்தடங்கள் பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் விழுப்புரம்- மயிலாடுதுறை இடையேயான வழித்தடத்தைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்த வழித்தடம் கிட்டத்தட்ட 4 மாவட்டங்களுக்கு உயிர் நாடியாக விளங்கும் வழித்தடமாகும். இன்தப் பணியை விரைவுபடுத்தி ரயில் போக்குவரத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
அதைப் போலவே மகளிர் சுய உதவி குழுக்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ரயில்வே நிலையங்களில் கடைகள் நடத்த அனுமதியளிப்பதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
ரயில்வே மாளிகைகளில் உதவியாளர், துப்புரவுத் தொழிலாளர் நியமனத்தில் உள்ள இட ஒதுக்கீட்டில் சுழற்சி முறை கையாளப்பட வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய எழுத்துத் தேர்வு வைப்பதை தவிர்க்க வேண்டும்.
விழுப்புரம்- திண்டுக்கலுக்கு இடையேயான பாதையில் இரண்டு அகல ரயில் பாதையும், கும்பகோணம்- அரியலூருக்கு இடையே புதிய அகல ரயில் பாதையும், அரியலூர்- சேலம் இடையே அகல ரயில் பாதையும் அமைக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 8 புதிய ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு 50 சதவீத பங்காக செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு போதுமான வருவாய் இல்லாததால் இந்த நிபந்தனை ஏற்புடையதல்ல. எனவே எல்லா திட்டங்களுக்கான முழு செலவையும் ரயில்வே துறையே ஏற்க வேண்டும் என்றார்.
மிக அட்டகசமான கருத்துக்களை எடுத்து வைத்த திருமாவளவனின் பேச்சுக்கு பிற எம்பிக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications