மதுரை ஐ.டி ஏற்றுமதி 88% அதிகரிப்பு!
சென்னை: சாப்ட்வேர் ஏற்றுமதியில் மதுரை மாபெரும் வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளது. அந்த நகரிலிருந்து ஏற்றுமதியான சாப்ட்வேரின் அளவு 88 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழக ஐ.டி. துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் கூறுகையில்,
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை தான் இந்தத் துறையில் மிக வேகமான வளர்ச்சிக் காட்டி வருகிறது. 2007-08ம் ஆண்டில் ரூ. 14.36 கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்த மதுரை கடந்த ஆண்டு ரூ.27.09 கோடியை எட்டிப் பிடித்துள்ளது. இது 88 சதவீத வளர்ச்சியாகும்.
அதே போல கோவையின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ 367.26 கோடியிலிருந்து ரூ. 373.76 கோடியாக உயர்ந்துள்லது.
திருச்சியின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 23.84 கோடியிலிருந்து ரூ 24.03 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐ.டி. துறைக்கென தனி கொள்கை அறிவிக்கப்பட்டு இரண்டாம் கட்ட நகரங்களில் திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மதுரையில் உள்கட்டமைப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ளன. திருச்சியில் 9 நிறுவனங்கள் தங்களது கிளைகளை தொடங்க ஆர்வமாக உள்ளன. அடுத்து சேலம், ஓசூரில் கவனம் செலுத்த உள்ளோம்.
கோவையில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா பணிகள், வரும் டிசம்பரில் முடிவடையும்.
ஐ.டி. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் 2008-09ம் ஆண்டில் மட்டும் ரூ.3,063 கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடுகள் ஈட்டப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications