விமான நிலைய பாதுகாப்பு-ஏஜென்சிகளுக்கு உத்தரவு
இதுதொடர்பான ஏஜென்சிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், விமான நிலைய ஆணையக அதிகாரிகள், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் சென்னையில் சமீபத்தில் நடந்தது.
அக்கூட்டத்தில் ஜூலை 15ம் தேதிக்குள் இந்த விவரங்களை அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இது வழக்கமான நடவடிக்கைதான். விமான நிலையங்களில் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் குறித்த தகவல்களை அப்டேட் செய்து கொள்வதுடன், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விமான நிலைய இயக்குநர் நடராஜ் தெரிவித்தார்.
நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்கள், நிறுவனம் குறித்த முழு விவரங்கள், யார் மீதேனும் குற்ற நடவடிக்கைள் உள்ளதா என்பது குறித்த தகவல்கள், உரிமங்களின் நகல்கள் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென் பிராந்தியத்தில் மொத்தம் 55 ஏஜென்சிகள் உள்ளன. சென்னை விமான நிலையத்தில் மட்டும் 25 ஏஜென்சிகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.