மாயாவதி சிலை: தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: நெய்டாவில் மாயாவதி சிலை நிறுவப்படுவதை தங்களால் தடுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் இது போன்ற விவகாரங்களில் தலையிட எங்களுக்கு போதிய அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்து தனது கட்சி நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தனக்கும் மாநிலம் முழுவதும் சிலைகளை அமைத்து உள்ளார்.
மேலும், டெல்லியின் துணை நகரங்களின் ஒன்றான நொய்டாவில் அம்பேத்கார், கன்ஷிராம், மாயாவதி ஆகிய மூன்று பேருக்கும் உத்தர பிரதேச அரசு சிலைகள் அமைத்து வருகிறது.
இந்த சிலைகள் ஒவ்வொன்றும் தலா 18 அடி உயரத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பில் தயாராகி வருகிறது. இந்த சிலைகளுக்கு அருகில் சென்ட்ரல் பார்க் பிளாசா என்ற பெயரில் பூங்கா ஒன்றையும் அமைக்க இருக்கிறது. இந்த நொய்டா திட்டத்தின் மொத்த செலவு ரூ. 187.20 கோடியாகும்.
இதையடுத்து மாயாவதி மக்கள் சொத்தை வீணடிக்கிறார் என கூறி ரவிகாந்த் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகையில்,
ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு, அமைச்சரவையை கூட்டி எடுக்கும் நடவடிக்களை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தால் எதுவும் பெரிதாக செய்ய முடியாது. நெய்டாவில் மாயாவதி சிலை நிறுவப்படுவதை தங்களால் தடுக்க முடியாது.
இது தொடர்பாக கீழ் நீதிமன்றங்களில் வேண்டுமானால் வழக்குத் தொடரலாம் என்றார்.












Click it and Unblock the Notifications