ராணுவ வாகனங்கள் தாக்குதல்: மதிமுகவினர் மீதான குண்டர் சட்டம்-ஜனாதிபதி ரத்து
கோவை: கோயம்புத்தூரில் இந்திய ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மதிமுகவினர் உள்ளிட்ட 5 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் வழியாக இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதங்களை கொண்டு செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து மதிமுக, பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த சிலர் நீலாம்பூர் பை-பாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்களை மறித்தனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கல் ராணுவ வாகனங்களை சேதப்படுத்தினர். இதையடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பீளமேடு மதிமுக மாணவர் அணி அமைப்பாளர் சந்திரசேகன் உள்ளிட்ட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில் இதை எதிர்த்து சந்திரசேகரன் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு மனு செய்தார். அவரது மனுவை பரிசீலனை செய்த ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.