பாக். தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் - மன்மோகன் சிங் அறிவுரை

இத்தாலியின் லா அக்யூலா நகரில் நடைபெற்ற ஜி 8 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நாடு திரும்பும் வழியில் விமானத்தி்ல் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர்க கூறுகையில், இந்தியாவுக்கு எதிராக தனது மண்ணைப் பயன்படுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள் மீது நம்பகமான முறையில் பாகிஸ்தான் அரசு செயல்பட வேண்டும்.
அடுத்த வாரம் எகிப்தில் நடைபெறவுள்ள அணி சேரா நாடுகள் கூட்டத்தின்போது, நான் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்திக்கும்போது இதையே வலியுறுத்தவுள்ளேன்.
மும்பை தீவிரவாத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்த பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதை அவரிடம் வலியுறுத்தவுள்ளேன். இதுபோன்ற செயல்களுக்கு பாகிஸ்தான் மண்ணைப் பயன்படுத்த அரசு அனுமதிக்கக் கூடாது என்பதையும் அவரிடம் சொல்லவுள்ளேன்.
தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையாக நடந்து கொள்ளுமானால், இந்த நடவடிக்கைளை அது உறுதியாக எடுக்குமானால் பாதி தொலைவை இரு நாடுகளும் கடந்து விடும்.
தீவிரவாதம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்துவேறுபாடுகள் உள்ளன. ஆனால் நான் நம்பிக்கையை விடவில்லை. நமது நாட்டுத் தூதர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலைவருடன் பேசியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேசியுள்ளார். அனைத்தும் சரியான திசையில் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தெற்காசியாவில் அமைதி நிலவ அனைத்து அண்டை நாடுகளுடனும்












Click it and Unblock the Notifications