கேஜி படுகை எரிவாயு முழுவதும் அரசுக்கே சொந்தம் -முரளி தியோரா

Subscribe to Oneindia Tamil

Murli Deora
மும்பை: கிருஷ்ணா - கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்படும் எரிவாயு இந்திய அரசுக்குச் சொந்தமானது. அதற்கு அம்பானி சகோதரர்கள் உரிமை கொண்டாடுவதில் அர்த்தமில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இன்று அறிவித்துள்ளார்.

கேஜி பேஸின் எனப்படும் கிருஷ்ணா - கோதாவரிப் படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது பெருமளவில் இயற்கை எரிவாயுவை எடுத்து வருகிறது.

இந்த எரிவாயுவை குறிப்பிட்ட விலைக்கு தனது ஆர்என்ஆர்எல் நிறுவனத்துக்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தரவேண்டும் என அனில் அம்பானி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியிருப்பதாவது:

கேஜி படுகையில் எடுக்கப்படும் எரிவாயு அரசுக்கு சொந்தமானது. இதை முகேஷ் அம்பானியோ அனில் அம்பானியோ உரிமை கோர முடியாது.

இதற்கு மேல் தெளிவாக இந்த விஷயத்தில் சொல்ல ஒன்றுமில்லை. கோர்ட்டில் நடப்பது அவர்கள் தனிப்பட்ட விவகாரம். எரிவாயு முழுக்க அரசுக்கே சொந்தம் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும், என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+