தோழியருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி மாடியிலிருந்து விழுந்து பலி
சென்னை: சென்னை தரமணியில், கல்லூரி விடுதியின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த 20 வயது மாணவி, தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த மாணவியின் பெயர் மான்சி கத்தானி. ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் கல்லூரியில் படித்து வந்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் தரமணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
சனிக்கிழமை தனது தோழியருடன் விடுதி மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்து விட்டார். கட்டடங்களின் வழியாக கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை அடையாரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி டீன் ஸ்ரீகுமார் மேனன் கூறுகையில், எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது யாருக்கம் சரியாக தெரியவில்லை. மாடிப் படையின் சுற்றுச் சுவரில் அமர்ந்தபோது தவறி விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
மலர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார் என்றார்.
மாடிக்கு யாரும் செல்லக் கூடாது என்று விடுதி நிர்வாகம் மாணவிகளை அறிவுறுத்தியிருந்ததாம். ஆனால் அதை மீறி மாணவிகள் பேசச் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த விபரீதம் நடந்து விட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications