பேராசிரியர் சபர்வால் படுகொலை-6 குற்றவாளிகளையும் விடுவித்தது நாக்பூர் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

Sabharwal
நாக்பூர்: கடந்த 2006ம் ஆண்டு உஜ்ஜைனியில் உள்ள மாதவ் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கானோரின் கண் முன்பாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்களால் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட பேராசிரியர் சபர்வால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பேரையும் நிரபராதிகள் எனக் கூறி விடுவித்து விட்டது நாக்பூர் கோர்ட்.

அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருந்தார் சபர்வால். கல்லூரி மாணவர் சங்க தேர்தலை தள்ளிப் போடுவது குறித்து அவர் ஏபிவிபி மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவர்கள் சபர்வாலை கத்தியால் குத்திக் கொன்றனர்.

இந்த வழக்கை முதலில் உஜ்ஜைன் போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால் கொலையாளிகள் பாஜகவின் ஒரு அங்கத்தினர் என்பதால், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்திலிருந்து வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார் சபர்வாலின் மகன் ஹிமன்சு.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் வழக்கு நாக்பூர் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இன்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், போதிய ஆதாரம் இல்லாததால் 6 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+