உதவித் தொகை உயர்வு கோரி கால்நடை பயிற்சி டாக்டர்களும் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உதவித் தொகையை உயர்த்தக் கோரி கால்நடை பயிற்சி மருத்துவர்களும் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ், முடித்த பயிற்சி டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், உதவித் தொகையை உயர்த்தக் கோரி காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அறிவித்த உதவித் தொகை உயர்வு போதாது என்று அவர்கள் கூறி விட்டனர்.
இந்த ஸ்டிரைக் காரணமாக அரசு மருத்துவமனைகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் கால்நடை பயிற்சி மருத்துவர்களும் இப்போது ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications