மும்பையில் பேய் மழை!-ஸ்தம்பித்தது நகரம்!!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நேற்று இரவு முதல் இன்று மாலை வரை கொட்டித் தீர்த்த பலத்த மழையால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. ரயில், சாலைப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.

பலத்த காற்றுடன் நேற்று இரவு முழுவதும் மும்பையை மழை விளாசித் தள்ளியது. இந்த மழை இன்று மாலை வரையிலும் விடாமல் கொட்டித் தீர்த்ததால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது.

புறநகர் ரயில்கள் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் நெடு நேரம் தாமதமாக சென்றன.

கிங்ஸ் சர்க்கிள், சியோன், அந்தேரி மிலன் சப்வே, ஹிந்த் மாதா ஆகிய பகுதிகளில் நீரில் மிதக்கின்றன.

சர்வதேச விமான நிலையத்தில் வெளிச்சம் குறைவாக இருந்ததால், போக்குவரதது பாதிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே மும்பையில் இந்த சீசனில் பலத்த மழை பெய்வதும், இதனால் நகரமே ஸ்தம்பித்துப் போவதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் மழை நீர் வடிகாலுக்காக பல லட்சம் பணத்தை செலவு செய்வதாக மாநகராடசி கூறுகிறது. ஆனால் சாதாரண மழை பெய்தாலே மும்பை முங்கிப் போய் விடுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. முக்கியச் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடுவதால் பஸ்கள் ஓடவில்லை. வாகனங்களையும் ஓட்டிச் செல்ல முடியவில்லை.

இதன் காரணமாக ரயில் நிலையங்கள், விமான நிலையத்திற்கு வர முடியாமல் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.

கன மழை காரணமாக அந்தேரி சப்வே மூடபப்ட்டு விட்டது.

இன்று மாலை வரை கொலாபாவில் 93.4 மில்லிமீட்டர் மழையும், சான்டா க்ரூஸில் 125.6 மில்லிமீட்டர் மழையும் கொட்டியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையமும் பீதியை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+