ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் ஸ்ரீதரன்
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் கழக நிர்வாக இயக்குநர் ஸ்ரீதரன் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலையில், லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே மெட்ரோ ரயில் திட்டப் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தானே முழுப் பொறுப்பேற்பதாக கூறிய ஸ்ரீதரன் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு அனுப்பினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் ஷீலா. ஸ்ரீதரனின் சேவை நாட்டுக்கு மிகவும் தேவை. நாட்டுக்காக மிகப் பெரிய சாதனைச் செயல்களைச் செய்தவர் அவர். அவர் நாட்டுக்கு மிகவம் அவசியம் என்று கூறியிருந்தார்.
மேலும் இதுதொடர்பாக ஸ்ரீதரனுக்கும், ஒரு கடிதத்தை அனுப்பி சமாதானப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து நேற்று தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் ஸ்ரீதரன்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் கழக செய்தித் தொடர்பாளர் அனூஜ் தயாள் கூறுகையில், முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி ஆகியோர் ஸ்ரீதரனை சமாதானப்படுத்தினர். இதையடுத்து தனது முடிவை அவர் திரும்பப் பெற்றார்.
தொடர்ந்து நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications