உதயசூரியன் சின்னம் கோரி சிரஞ்சீவி மனு
திருப்பதி: நடிகர் சிரஞ்சீவி தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு உதயசூரியன் சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனிடம் மனு செய்துள்ளார்.
மீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டசபை-நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி 14 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் படுதோல்வி அடைந்தது. அனைத்து சட்டசபை தொகுதியிலும் போட்டியிட்டு 18 தொகுதியில் மட்டும் வென்றது. மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த தோல்விக்கு தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ரயில் என்ஜின் சின்னம் தான் காரணம் என்று சிரஞ்சீவி கருதுகிறாராம். இதனால் சின்னத்தை மாற்ற முடிவு செய்து தனது கட்சிக் கொடியில் சூரியன் இருப்பதால், உதயசூரியன் சின்னத்தை பெறத் திட்டமிட்டுள்ளார்.
அவரது கட்சியைச் சேர்ந்த உமா மல்லேஸ்வர ராவ், ராமச்சந்திரய்யா ஆகியோர் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளித்தனர்.
உதயசூரியன் சின்னத்தை ஒதுக்க முடியாவிட்டால் சக்கரம் சின்னம் ஒதுக்கும்படி கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications