பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் தமிழகத்தி்ல் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையி்ல்,

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்யும். தனியார் பள்ளிகளில் கட்டணம் குறித்து முடிவு செய்ய ஓய்வு பெற் நீதிபதி, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், மெட்ரிகுலேசன் துறை இயக்குனர், பொதுப்பணித்துறை இணை தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள் பிரிவு), பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும்.

இந்தக் குழுவின் பரிந்துரைப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் அமலுக்கு வந்தால் விதியை மீறி அதிக கட்டணம் வசூலிப்போரை 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். மேலும் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திரும்ப வசூலிக்கவும் இந்த சட்டம் வழி செய்யும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+