'காமராஜரைப் போல் எளிமையாக வாழ வேண்டும்'
விருதுநகர்: காமராஜரைப் போல் மாணவர்கள் எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய தரை வழி போக்குவரத்து இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறினார்.
விருதுநகரில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ், மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இந்த விழாற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் நவீன் தலைமை வகித்தார். எம்பி மாணிக் தாகூர் வகித்தார்.
விருதுநகர் தொகுதியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் முன்று இடங்கள் பெற்றவர்களுக்கு மத்திய இணைஅமைச்சர் சிங் சான்றிதழும், கேடயமும்
வழங்கினார்.
பின்பு மத்திய தரை வழி போக்குவரத்து இணைஅமைச்சர் சிங் பேசுகையில்,
காமராஜரின் எளிமையும், நேர்மையும் நாடு முழுவதும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தமிழக முதல்வராக இருந்த போது மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டமும், கிராமப்புறங்களில் சிறியஅணைகள் கட்டுவதற்கும், தொழிற்சாலைகள்
உருவாவதற்கும் அடிப்படை காரணமாக இருந்தார்.
காமராஜரைப் போல் மாணவர்கள் எளிமையாக வாழவேண்டும். மாணவர்கள் காந்திய கொள்கைகளை பின்பற்றி நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications