திட்டமிட்டபடி பாலாற்றில் அணை- ஆந்திரா
ஹைதராபாத்: திட்டமிட்டபடி பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என்று ஆந்திர அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகாவைச் சேர்ந்த கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டத் திட்டமிட்டுள்ளது ஆந்திரா.
இதற்கு தமிழக அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.
ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஆந்திர அரசு தொடர்ந்து அது தொடர்பான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது கால்வாய் தோண்டும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
இதையடுத்து ஆந்திராவுடன் தண்ணீர்ச் சண்டை ஏற்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முதல்வர் ராஜசேகர ரெட்டி, மாநில பெரும் பாசனத் துறை அமைச்சர் பொன்னால லட்சுமய்யாவுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இதுவரை இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை. மாறாக சுமூகமாக பேசித் தீர்க்குமாறுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அணை கட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று முதல்வருக்கு எடுத்துக் கூறப்பட்டதாம். இதையடுத்து திட்டமிட்டபடி பணிகள் தொடரட்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளாராம்.
இதையடுத்து ரூ. 55 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகளை திட்டமிட்டபடி தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளனர் ஆந்திர அதிகாரிகள்.
நேற்று தான் அணை கட்ட ஆரம்பிக்கவில்லை என்று லட்சுமய்யா கதை விட்டது குறிப்பிடத்தக்கது.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications