கடலுக்கு சென்ற 7 ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள், நான்கு நாட்களாக காணவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஜூலை 13ம்தேதி நான்கு மீனவர்கள், மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் ஒருவரது இறந்த உடல் தனுஷ்கோடி அருகே 5வது தீடையில் கரை ஒதுங்கியது. நான்கு மீனவர்களும் சென்ற படகு உடைந்த நிலையில் கரை ஒதுங்கியது. மற்ற 3 பேரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
இதேபோல மேலும் நான்கு மீனவர்கள் ஜூலை 15ம் தேதி மீன் பிடிக்கச் சென்று இதுவரை கரை திரும்பவில்லை. அவ்ரகளைக் கண்டுபிடிக்கும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் அதில் பலன் ஏதும் இல்லை.
கடந்த சில நாட்களாக பாம்பன் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications