பாடகி ஜானகி சென்ற கார் மோதி வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
சித்தோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் கார் மோதி வாலிபர் பலியானார்.
சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்கு தனது மகன் பத்ரிநாத்துடன் எஸ்.ஜானகி காரில் சென்றார்.
இன்று காலை ஈரோடு அருகே சித்தோட்டை அடுத்துள்ள செல்லப்பன் பாளையம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊர் என்பது தெரியவில்லை. விபத்தில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications