குப்பைத் தொட்டிகளில் 2 பெண் சிசு உடல்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், புழுதிவாக்கத்தில் குப்பைத் தொட்டிகளில் 2 பெண் சிசுக்களின் உடல்கள் கிடந்தன. தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டு வீசப்பட்டுள்ளன.
நுங்கம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே கூவம் சாக்கடை அருகே உள்ள குப்பைத் தொட்டியில் இன்று காலை ஒரு பெண் சிசு தொப்புக் கொடி அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தது. இந்தக் குழந்தை பிறந்து மூன்றே நாட்கள் ஆனதாகும்.
அதே போல புழுதிவாக்கம் செங்கேணியம்மன் கோவில் அருகே குப்பைத் தொட்டியிலும் இன்னொரு பெண் குழந்தை பிணமாகக் கிடந்தது. இது பிறந்து ஒரே நாள் ஆனதாகும்.
இரு உடல்களையும் போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications