For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலாறு: மக்களவையில் கைகோர்த்த திமுக-அதிமுக

By Staff
Google Oneindia Tamil News

Palaru River
டெல்லி: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைக் கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என மக்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் ஒற்றுமையாகக் குரல் கொடுத்தனர்.

வழக்கமாக அனைத்து விஷயங்களிலும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் இந்த இரு கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து குரல் தந்ததை மக்களவையில் பிற கட்சி எம்பிக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

மத்திய விவசாயத்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது இன்று மக்களவையில் விவாதம் நடநத்து. அப்போது பேசிய திமுக எம்பி ஆதிசங்கர்,

இந்த தடுப்பணைக் கட்டும் திட்டத்தை ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி கைவிடச் செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனாலும் அந்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.

இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு அணை கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். இதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடவும் தமிழகம் தயாராக உள்ளது.

இந்த அணை கட்டப்பட்டால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் என்றார்.

ஆதிசங்கருக்கு ஆதரவாகப் பேசிய அதிமுக எம்பி ஆனந்தன், மத்திய அரசிடமோ அல்லது தமிழக அரசிடமோ ஒப்புதல் பெறாமல் இந்த அணையை ஆந்திரம் கட்டுகிறது.

இதனால் மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். இந்த தடுப்பணை கட்டப்பட்டால் வட தமிழகம் வறண்டு போய்விடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களி்ல் விவசாயமே நொடிந்துவிடும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X