இலங்கைக்கு ஐஎம்எப் கடன்-எதிர்ப்பை கைவிட்ட யு.எஸ்
கொழும்பு: சர்வதேச நிதியத்தில் இந்தியாவின் வலுவான ஆதரவு மற்றும் இலங்கை மீதான சீனாவின் அதிகரிக்கும் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பது ஆகிய காரணங்களால், இலங்கைக்கு கடனுதவி அளிக்க தெரிவித்து வந்த எதிர்ப்பை கைவிட்டுள்ளது அமெரிக்கா. இதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச நிதியத்தின் கடனுதவி கிடைப்பது உறுதியாகி விட்டது.
கிட்டத்தட்ட 2.5 பில்லியன் டாலர் கடனுதவி இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.
ஜூலை 24ம் தேதி சர்வதேச நிதியத்தின் செயல் வாரிய கூட்டம் கூடுகிறது. அன்று கடனுதவிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கு வசதியாக நிதியம் விதித்துள்ள சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக இலங்கை அரசு ஒப்புதல் கடிதத்தை வாரியத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
மே 14ம் தேதி வன்னியில் போர் உச்சத்தி்ல் இருந்தபோது, இலங்கையில் பெருமளவில் அப்பாவிகள் கொல்லப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டுக்கு கடன் உதவி தருவது பொருத்தமாக இருக்காது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியிருந்தார். இதையடுத்து அமெரிக்காவின் எதிர்ப்பால் கடன் தொகையை தருவதை நிறுத்தி வைத்திருந்தது சர்வதேச நிதியம்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச அளவில் நடந்த தீவிரப் பிரசாரத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்கி வந்தது.
ஆனால் சமீப காலமாக அமெரிக்காவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகளை இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் பலித கொஹனா சந்தித்துப் பேசிய போது, கடன் உதவிக்கு எதிராக அமெரிக்கா முட்டுக்கட்டை போடவில்லை என்பதை அமெரிக்க தரப்பு தெளிவுபடுத்தியது. இதன் மூலம், அமெரிக்கா தனது எதிர்ப்பை கைவிட்டு விட்டது தெளிவானது.
அமெரிக்கா தனது எதிர்ப்பை திடீரென கைவிட முக்கிய காரணம் இந்தியா மற்றும் சீனாதான் என்று கூறப்படுகிறது.
சர்வதேச நிதியத்தின் வாரிய உறுப்பினர்களிடையே இந்தியாவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே எப்படியாவது இந்தியா மூலமாக இலங்கை கடனுதவியைப் பெற்று விடும் நிலை ஏற்பட்டது. அப்படி நடந்தால் அது அமெரிக்காவுக்கு பெரும் மூக்குடைப்பாகப் போய் விடும் என அமெரிக்கா பயந்தது.
மேலும், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு வேளை சர்வதேச நிதியத்தின் கடன் தொகை கிடைக்காவிட்டால் சீனா முழுத் தொகையையும் கொடுத்து இலங்கையில் வலுவாக காலூன்றி விடும் அபாயமும் உள்ளது.
இந்தக் காரணங்களால்தான் தனது எதிர்ப்பை தடாலடியாக கைவிட்டு விட்டது அமெரிக்கா என்கிறார்கள்.
சமீபத்தில் இலங்கைக்கு 1.2 பில்லியன் டாலர் கடனுதவியை நீண்ட கால அடிப்படையில் வழங்க சீனா, இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும், மாத்தரை - கதிர்காமம் ரயில்வே பணிக்காக இலங்கை அரசுக்கு நிதியுதவி அளிக்க தயாராக இருப்பதாக சீனா எக்ஸிம் வங்கி கடிதம் அனுப்பியது நினைவிருக்கலாம். இவற்றையெல்லாம் பார்த்துதான் தனது எதிர்ப்பு நிலையைக் கைவிட்டுள்ளது அமெரிக்கா எனக் கூறப்படுகிறது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications